Saturday, May 7, 2011

~ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?~

உங்களுடன் ஒரு நிமிடம்...

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?


  • சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது
  • வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது
  • வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது
  • அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது
  • அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது
  • வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது
  • வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது
  • உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது
  • தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது
  • அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது
  • தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது
  • தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது
  • சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது
  • விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது
  • அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது
  • குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது
  • கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது
  • நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது
  • அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது
இப்போது சொல்லுகள், உங்களிடம் என்ன இருக்கிறது?
உங்களுடன் ஒரு நிமிடம்...

ஜெயித்தவர்களிடம் அப்படி என்னதான்இருக்கிறது?


  • சாதிக்க வேண்டும் என்ற சபதம் இருக்கிறது
  • வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது
  • வென்று காட்ட வேண்டும் என்ற வீம்பு இருக்கிறது
  • அடைவதற்கு என்று ஒரு லட்சியம் இருக்கிறது
  • அந்த லட்சியத்தில் ஒரு தீவிரம் இருக்கிறது
  • வாய்ப்பு எங்கே எங்கே என்று தேடுகின்ற தாகம் இருக்கிறது
  • வாய்ப்பு வரவில்லை என்றால் அதை உருவாக்கும் திறமை இருக்கிறது
  • உணவு, உறக்கம் இவற்றைக்கூட ஒதுக்கி வைக்கும் உழைப்பு இருக்கிறது
  • தடை, தாமதம், தோல்வி எது வந்தாலும் சமாளிக்கும் தாராள மனம் இருக்கிறது
  • அடிமேல் அடிபட்டாலும் அடுத்த அடியை எடுத்து வைக்கும் துணிச்சல் இருக்கிறது
  • தங்கள் தகுதிக்கும், திறமைக்கும் சரியான தீனி எங்கே எங்கே என்கிற தேடல் இருக்கிறது
  • தொடர்ந்து, எந்த வகையிலாவது ஏதாவது பலங்களைக் கூட்டிக்கொள்ளும் பழக்கம் இருக்கிறது
  • சூழ்நிலைக்குத் தகுந்தபடி அனுசரித்துப்போகும் அடக்கம் இருக்கிறது
  • விமர்சனத்தைச் சரியான விதத்தில் எடுத்துக்கொள்ளும் விவேகம் இருக்கிறது
  • அறிவு, ஆற்றல், ஆதரவுகள் அனைத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் மூளை இருக்கிறது
  • குறிக்கோள் நோக்கிய வேலைகளுக்கு மட்டுமே நேரத்தை அதிகமாய் ஒதுக்கும் அக்கறை இருக்கிறது
  • கடமைகள் காத்துக் கிடக்க, பொழுதுபோக்குகளில் புத்தியை செலுத்தாத பொறுப்பு இருக்கிறது
  • நேற்றைவிட இன்று எவ்வளவு வளர்ந்தோம் என்று அளந்து அறியும் ஆர்வம் இருக்கிறது
  • அத்தனைக்கும் அடிப்படையாய் அசைக்க முடியாத தன்னம்பிக்கை இருக்கிறது
இப்போது சொல்லுகள், உங்களிடம் என்ன இருக்கிறது?
Related Posts Plugin for WordPress, Blogger...

3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ம்.. அசத்தல்..
தொடர்ந்து எழுதுங்கள்..

கூடல் பாலா said...

சிந்தனையை தூண்டும் வரிகள் ...தொடர்க உங்கள் சிந்தனை ...!

bigilu said...

அட்டகாசம்.... என்னை சிந்திக்க வைத்தது..