Tuesday, March 29, 2011

தீவிரவாதிகளின் உரையாடல்

இந்த பதிவு யாரையோ கிண்டல் செய்ய வேண்டும் , நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும் , கோபத்திலும் எழுதியது.


தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி , இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு ,தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி , சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே ?


தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துல மறந்திடுறாங்க.


தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை , ஏழை , நடுத்தர மக்களை விட்டுட்டு , இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற மேல்தட்டு மக்களை தாக்குனோம்.


தீவிரவாதி 2: அதுக்கும் எந்த விதமான பிரயோஜனம் இருக்குற மாதிரி இல்ல. நாம நடத்தின தாக்குதல வச்சி அரசியல்வாதிங்க இப்பவே அவனுங்களுக்காக ஒட்டு பொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க.


தீவிரவாதி 1: எனக்கென்னமோ , ஒரு நல்ல விஷயம் நடக்குற மாதிரி இருக்குது.


தீவிரவாதி 2: என்ன ?


தீவிரவாதி 1: ஏதோ , தகவல் பரிமாறிக்கணும் ' ன்னு நம்ம பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர கூப்பிட்டு இருக்காங்க.போயிட்டு வந்ததும் , அவர்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு அடுத்த முறை அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணனும். மாட்டிக்க கூடாது.


தீவிரவாதி 2: மாட்டினாலும் பிரச்சனை இல்லை. ஏன்னு சொல்லு ?


தீவிரவாதி 1 ( யோசித்துவிட்டு): கருணை மனு போட்டுட்டு வெளிய வந்திடலாம். அதானே ? சரியா ?


தீவிரவாதி 2: ஆமாம். ஆமாம். அதே மாதிரி , அடுத்த முறை இந்தியாவுல கொஞ்சம் ஆளுங்கள நமக்காக ஏற்பாடு பண்ணினா போதும்.


தீவிரவாதி 1: ஏன் ?


தீவிரவாதி 2: நமக்காக வேல பார்க்க , நிறைய டிவி சானல்கள் இருக்காங்க. நம்மளோட சாட்டிலைட் போன் மூலமா , பேச மட்டும்தான் முடியுது. ஆனா , அவுங்க நமக்காக லைவ் டெலிகாஸ்ட் ' யே பண்றாங்க. அது மட்டும் இல்லாம , கமாண்டர்ஸ் கிட்ட பேசி என்ன பிளான்னு கேட்டும் சொல்றாங்க. ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.


தீவிரவாதி 1: கரெக்ட். அடுத்து எங்க டார்கெட் பண்ணலாம் ? சவுத் இந்தியாவுல பண்ணிரலாமா ? சென்னை எப்படி ?


தீவிரவாதி 2: அங்க வேண்டாம்.


தீவிரவாதி 1: ஏன் ?


தீவிரவாதி 2: நாம கஷ்டப்பட்டு குண்டு வைப்போம். ஆனா அங்க இருக்குற அரசியல்வாதிகள் குண்டு வச்சது யாருன்னு அவுங்களுக்குள்ள அடிச்சிக்குவாங்க. ஆளுங்கட்சி , எதிர்கட்சியை சொல்லுவாங்க. எதிர்க்கட்சி ,ஆளுங்கட்சியை சொல்லுவாங்க. கடைசில நம்மள மறந்திடுவாங்க.


தீவிரவாதி 1: ஒ!


தீவிரவாதி 2: அதுமட்டும் இல்ல. டிவிக்காரங்களும் , இந்த அளவுக்கு உதவுவாங்கன்னு சொல்ல முடியாது. அவுங்கவுங்க கட்சிகாரங்களையும் , சினிமாகாரங்களையும் பேட்டி கண்டுட்டு இருப்பாங்க.


தீவிரவாதி 1: இப்பதான் ஒரு தாக்குதல் பண்ணிருக்கோம். அதுக்குள்ளே இன்னொன்னு பண்ண முடியுமா ?முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்திருப்பாங்களே ?


தீவிரவாதி 2: கடல் வழியா வந்தோம்னு எல்லா துறைமுகத்திலையும் பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்களாம். ஹோட்டல் ' ல தாக்குதல் பண்ணிருக்கோம்னு எல்லா ஹோட்டல் ' லையும் பாதுகாப்ப அதிகரிக்க சொல்லி இருக்காங்களாம். இவனுங்க எப்பவும் இப்படித்தான். கோவில அடிச்சா கோவிலுக்கு பாதுகாப்பு. மார்க்கெட்ட அடிச்சா மார்க்கெட்டுக்கு பாதுகாப்பு. தியேட்டர அடிச்சா தியேட்டர்களுக்கு பாதுகாப்பு. நாம என்ன அடிச்ச எடத்தையா இருப்பி அடிப்போம் ?



தீவிரவாதி 1: அதானே ? ஆனாலும் எனக்கு வர வர வன்முறை மேல நம்பிக்கையே போயிடுச்சி.


தீவிரவாதி 2: ஏன் ?

தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க.இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா...

அவனுங்களே வெறுத்து சோர்ந்து தீவிரவாதத்தை விட்டாதான் உண்டு.
இந்த பதிவு யாரையோ கிண்டல் செய்ய வேண்டும் , நக்கல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நையாண்டி நோக்கில் எழுதப்படவில்லை. நடப்பதை கண்டு வலியிலும் , கோபத்திலும் எழுதியது.


தீவிரவாதி 1: நாம பனிரெண்டு பேர அனுப்பி , இருநூறு மக்களை கொன்னுருக்கோம். ஆனா இந்திய அரசு ,தீவிரவாதிகளுடனான போரில் வெற்றி , சதி முறியடிப்பு பேசிக்கிறாங்களே ?


தீவிரவாதி 2: அதான் எனக்கும் புரியல. டிபன் பாக்ஸ்ல குண்டு வச்சோம். ஒரு மாசத்துல மறந்திட்டாங்க. சைக்கிள்ள குண்டு வச்சோம். ரெண்டு மாசத்துல மறந்திட்டாங்க. என்ன பண்ணினாலும் அதிகபட்சம் மூணு மாசத்துல மறந்திடுறாங்க.


தீவிரவாதி 1: அதனால தான் இந்த தடவை , ஏழை , நடுத்தர மக்களை விட்டுட்டு , இந்திய அரசு அக்கறை எடுத்துக்கிற மேல்தட்டு மக்களை தாக்குனோம்.


தீவிரவாதி 2: அதுக்கும் எந்த விதமான பிரயோஜனம் இருக்குற மாதிரி இல்ல. நாம நடத்தின தாக்குதல வச்சி அரசியல்வாதிங்க இப்பவே அவனுங்களுக்காக ஒட்டு பொறுக்க ஆரம்பிச்சிட்டாங்க.


தீவிரவாதி 1: எனக்கென்னமோ , ஒரு நல்ல விஷயம் நடக்குற மாதிரி இருக்குது.


தீவிரவாதி 2: என்ன ?


தீவிரவாதி 1: ஏதோ , தகவல் பரிமாறிக்கணும் ' ன்னு நம்ம பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. தலைவர கூப்பிட்டு இருக்காங்க.போயிட்டு வந்ததும் , அவர்கிட்ட என்ன ஏதுன்னு கேட்டுட்டு அடுத்த முறை அதுக்கு ஏத்த மாதிரி பிளான் பண்ணனும். மாட்டிக்க கூடாது.


தீவிரவாதி 2: மாட்டினாலும் பிரச்சனை இல்லை. ஏன்னு சொல்லு ?


தீவிரவாதி 1 ( யோசித்துவிட்டு): கருணை மனு போட்டுட்டு வெளிய வந்திடலாம். அதானே ? சரியா ?


தீவிரவாதி 2: ஆமாம். ஆமாம். அதே மாதிரி , அடுத்த முறை இந்தியாவுல கொஞ்சம் ஆளுங்கள நமக்காக ஏற்பாடு பண்ணினா போதும்.


தீவிரவாதி 1: ஏன் ?


தீவிரவாதி 2: நமக்காக வேல பார்க்க , நிறைய டிவி சானல்கள் இருக்காங்க. நம்மளோட சாட்டிலைட் போன் மூலமா , பேச மட்டும்தான் முடியுது. ஆனா , அவுங்க நமக்காக லைவ் டெலிகாஸ்ட் ' யே பண்றாங்க. அது மட்டும் இல்லாம , கமாண்டர்ஸ் கிட்ட பேசி என்ன பிளான்னு கேட்டும் சொல்றாங்க. ரொம்ப யூஸ்புல்லா இருக்கு.


தீவிரவாதி 1: கரெக்ட். அடுத்து எங்க டார்கெட் பண்ணலாம் ? சவுத் இந்தியாவுல பண்ணிரலாமா ? சென்னை எப்படி ?


தீவிரவாதி 2: அங்க வேண்டாம்.


தீவிரவாதி 1: ஏன் ?


தீவிரவாதி 2: நாம கஷ்டப்பட்டு குண்டு வைப்போம். ஆனா அங்க இருக்குற அரசியல்வாதிகள் குண்டு வச்சது யாருன்னு அவுங்களுக்குள்ள அடிச்சிக்குவாங்க. ஆளுங்கட்சி , எதிர்கட்சியை சொல்லுவாங்க. எதிர்க்கட்சி ,ஆளுங்கட்சியை சொல்லுவாங்க. கடைசில நம்மள மறந்திடுவாங்க.


தீவிரவாதி 1: ஒ!


தீவிரவாதி 2: அதுமட்டும் இல்ல. டிவிக்காரங்களும் , இந்த அளவுக்கு உதவுவாங்கன்னு சொல்ல முடியாது. அவுங்கவுங்க கட்சிகாரங்களையும் , சினிமாகாரங்களையும் பேட்டி கண்டுட்டு இருப்பாங்க.


தீவிரவாதி 1: இப்பதான் ஒரு தாக்குதல் பண்ணிருக்கோம். அதுக்குள்ளே இன்னொன்னு பண்ண முடியுமா ?முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல எடுத்திருப்பாங்களே ?


தீவிரவாதி 2: கடல் வழியா வந்தோம்னு எல்லா துறைமுகத்திலையும் பாதுகாப்பு அதிகரிச்சிருக்காங்களாம். ஹோட்டல் ' ல தாக்குதல் பண்ணிருக்கோம்னு எல்லா ஹோட்டல் ' லையும் பாதுகாப்ப அதிகரிக்க சொல்லி இருக்காங்களாம். இவனுங்க எப்பவும் இப்படித்தான். கோவில அடிச்சா கோவிலுக்கு பாதுகாப்பு. மார்க்கெட்ட அடிச்சா மார்க்கெட்டுக்கு பாதுகாப்பு. தியேட்டர அடிச்சா தியேட்டர்களுக்கு பாதுகாப்பு. நாம என்ன அடிச்ச எடத்தையா இருப்பி அடிப்போம் ?



தீவிரவாதி 1: அதானே ? ஆனாலும் எனக்கு வர வர வன்முறை மேல நம்பிக்கையே போயிடுச்சி.


தீவிரவாதி 2: ஏன் ?

தீவிரவாதி 1: எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாங்க.இந்தியா ரொம்ம்ம்பபபப நல்ல நாடுப்பா...

அவனுங்களே வெறுத்து சோர்ந்து தீவிரவாதத்தை விட்டாதான் உண்டு.
Related Posts Plugin for WordPress, Blogger...